×

அரூர் அருகே மது விற்றவர் கைது

அரூர்: அரூர் அடுத்த வாழைத்தோட்டம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று காலை அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக டூவீலரில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில், மது பாட்டில்களை விற்பனைக்கு எடுத்துச்சென்றது தெரிய வந்தது. விசாரணையில் பேதாதம்பட்டியை சேர்ந்த ராஜா(54) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, மதுபாட்டில், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

The post அரூர் அருகே மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,banana ,Dinakaran ,
× RELATED தனியார் வெடி மருந்து கிடங்குகளில் ஆர்டிஓ ஆய்வு